
நான் அறிந்தவரை
ரக்கட் ஆண் பின்னொரு நாள் சாக்லேட் பாய் ஆகிவிடுகிறார்
சாக்லேட் பாயோ அகத்தில் அழுக்காய் இருக்கிறார்
கரடு முரடு நன்றா மென்மைத் தன்மை நன்றா
அடையாளத்தில் நன்மை இல்லை
வெள்ளையரும் பொய் கறுப்பரும் பொய்
நீதிமான் வெங்காயமாய் இருக்கிறார்
வெங்காயம் இன்னொரு நாளில் போராளியாகிவிடுகிறார்
மனிதருக்காய் ஈகை செய்கிறார்
சாக்லேட் பாய் அகவெறுப்புடன் வாழ்கிறார்
ஒருவர் தாடியும் மீசையும் மழித்து நங்கை ஆகிவிடுகிறார்
தன் மெய்மை அறிகிறார்
எல்லோரும் அகமும் புறமும் வேறு வேறாய் இருக்கிறார்
அடையாள அழிப்பு கால இயந்திரத்தின் ஓயாதவேலை
இதே பணியே பெண்களுக்கும்
பாணியும் இதே
பெண்களிலும் ரக்கட் வுமன் போற்றுதலுக்குரியோர் என்றோ
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு சமூகத்திற்காகாதென்றோ
குறளில்லை
அடையாளம் எல்லாம் வாஷிங் மெஷினில் சலவைக்குப் போய்
வெகு காலமாகிறது.
அவரவருக்கே அடையாளம் தெரியா
காலக்கண்ணாடியைக் கைக்குள் அடக்கிக்கொண்டார்
மனிதராவார்
**
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi